Wednesday, April 16, 2014

நடைமேடை இருக்கையில் ஒரு மணி நேரம்...

      நேற்று இரவு 10.05 மணிக்கு நான் பயணித்த கோவை-சேலம் பேருந்து சேலம் பேருந்து நிலையத்திற்குள் நுழைகிறது. என் அப்பாவிடம் இருந்து அலைபேசிக்கு அழைப்பு வருகிறது; "எங்கப்பா இருக்க?/ இப்பதான் பா சங்ககிரி தாண்டி இருக்கேன். முக்கா மணிநேரத்துள சேலம் வந்துடுவேன் பா./ சேரி பஸ் ஸ்டாண்டு வந்துட்டு ஃபோன் பண்ணு". அழைப்பைத் துண்டிக்க அடுத்து ஓர் அழைப்பு. கோகுலிடம் இருந்து; "கோகுல் எங்க இருக்க? பஸ் இப்பதான் பஸ் ஸ்டாண்டுகுள்ள நுழையுது