Monday, June 02, 2014

பெயரற்றவன்

     சராசரிகளுள் சிறந்த சராசரியாக ஆக வேண்டும், இதுவே இன்றைய சராசரிகளின் "உயர்ந்த குறிக்கோள்".
     ஒவ்வொரு சராசரி பிறக்கும்போதும் அவனுள்ளேயே ஒரு அபூர்வவாதியும் பிறக்கிறான்.
      ஆனால்,
      "நீ சராசரி தான்" என்று அவனை நம்பவைக்கின்றது இந்த சராசரி உலகம்.
       "ஆம், நானும் சராசரி தான்" என்று அவனும் காலப்போக்கில் நம்பி சராசரியாகவே மாறுகிறான்.

Wednesday, April 16, 2014

நடைமேடை இருக்கையில் ஒரு மணி நேரம்...

      நேற்று இரவு 10.05 மணிக்கு நான் பயணித்த கோவை-சேலம் பேருந்து சேலம் பேருந்து நிலையத்திற்குள் நுழைகிறது. என் அப்பாவிடம் இருந்து அலைபேசிக்கு அழைப்பு வருகிறது; "எங்கப்பா இருக்க?/ இப்பதான் பா சங்ககிரி தாண்டி இருக்கேன். முக்கா மணிநேரத்துள சேலம் வந்துடுவேன் பா./ சேரி பஸ் ஸ்டாண்டு வந்துட்டு ஃபோன் பண்ணு". அழைப்பைத் துண்டிக்க அடுத்து ஓர் அழைப்பு. கோகுலிடம் இருந்து; "கோகுல் எங்க இருக்க? பஸ் இப்பதான் பஸ் ஸ்டாண்டுகுள்ள நுழையுது